ஜெ. ராஜினாமா? - தொடரும் வதந்திகள்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா ராஜினாமா செய்யப் போவதாக, தொடர்ந்து வதந்திகள் நிலவி வருவதால்,புதன்கிழமை நடப்பதாக இருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இந்தக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தனது பதவியில் நீடிக்க முடியவில்லை என்றால், அந்தப் பதவிக்குவேறு யாரை நியமிப்பது என்பது பற்றி அமைச்சர்களிடம் கலந்து ஆலோசிப்பதற்காகத் தான் என்றும் வெளியில்பரபரப்பாகப் பேசிக்கொள்ளப்பட்டது.
இதற்காகத் தான் தமிழக கவர்னர் பொறுப்பைக் கவனிக்கும் ரங்கராஜனும் ஆந்திராவிலிருந்து சென்னைவருவதாகவும் கூறப்பட்டது. இதன்ால் அமைச்சர்கள் மத்தியிலும் கூட இந்தக் கூட்டம் பற்றி பெரிய எதிர்பார்ப்புஇருந்தது.
பிறகு, நேற்று மதியம் திடீரென இந்தக் கூட்டம் காரணம் எதுவும் சொல்லப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்ற வழக்குகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஜெயலலிதா மட்டும் ஆலோசனை நடத்தியதாகக்கூறப்பட்டது.