சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் படுகொலை
சென்னை:
சென்னையில் பொதுமக்கள் மத்தியில், வாலிபர் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. இக்கும்பலில் 5 பேர் இருந்தனர். திடீரென தன்னை ஒரு கும்பல்வழிமறிப்பதைப் பார்த்து அதிர்ந்த ஸ்டாலின் என்ன, ஏது என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளிக்காத அக்கும்பல்தங்களிடமிருந்த அரிவாள்கள், கத்திகள் ஆகியவற்றால் ஸ்டாலினை வெட்ட முயன்றது.
இதையடுத்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ஸ்டாலின் அங்கிருந்து ஓடினார். ஜாம்பஜார் பகுதியில் புகுந்துஅவர் ஓடியபோது, அங்கிருந்த பொதுமக்கள், அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போய், அப்படியே நின்றுவிட்டனர். ஒருவரும் கும்பலைத் தடுக்க முயலவில்லை.
இந்நிலையில் ஜாம்பஜார் போலீஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து அக்கும்பல் ஸ்டாலினை வெட்டிச் சாய்த்தது.ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டது.
எதற்காக அக்கும்பல் ஸ்டாலினை வெட்டிக் கொன்றது என்பது தெரியவில்லை. இருப்பினும் முன்பகைகாரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.