For Daily Alerts
Just In
காலராத் தொல்லை தமிழ்நாட்டில் இல்லை
சென்னை:
தமிழகத்தில் காலரா நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை நேற்று(வெள்ளிக்கிழமை) சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் காலரா நோயால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாக முன்மாதிரி வழக்கம் இல்லை. மேலும்நடப்பாண்டில் காலராவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்வர் ஒருவர் தான்.
2000-2001ம் ஆண்டில் காலரா முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. கிராமங்களில் இதற்காகவிழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
காய்ச்சி வடிகட்டிய குடிநீரைத் தான் பருகவேண்டும் என்பது போன்ற வழிமுறைகள் கிராம மக்களுக்கு எடுத்துச்சொல்லப்பட்டு வருகின்றன என்று செம்மலை கூறினார்.
Comments
Story first published: Saturday, September 8, 2001, 5:30 [IST]