For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஷச் சாராய பலிகள்: புலன் விசாரணைக்கு உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அம்பத்தூர் அருகே விஷச்சாராயம் அருந்தியதால் 13 பேர் பலியான சம்பவம் குறித்து அரசு புலன்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.

சட்டமன்றத்தில் நேற்று(சனிக்கிழமை) கேள்வி நேரம் முடிந்தபின், தமாகா உறுப்பினர் ஞானசேகரன், த.மா.கா.ஜனநாயப் பேரவை உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்கள்.

அப்போது, "காவல் துறையின் மெத்தனப் போக்கு தான் கள்ளச் சாராய விற்பனைக்கு காரணம். அதனால் அந்தப்பகுதியில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் கிராம அலுவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்"என்று அவர்கள் கூறினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பன்னீர் செல்வம், "கள்ளச் சாராயம் விற்று வந்த டில்லி மற்றும் மாசிலாமணிஆகியோர் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கீழ் பல வழக்குகள் உள்ளன.

உள்ளூரில் சாராயம் கிடைக்காத காரணத்தால், அவர்கள் வெளியூரில் இருந்து எரி சாராயத்தை வாங்கி வந்துகள்ளச் சாராயத்துடன் கலந்து கொடுத்துள்ளனர்.

அது விஷமாகியதால் 13 பேர் இறந்துள்ளனர். இவர்களில், டில்லியும் மாசிலாமணியும் அடக்கம். இது குறித்துவிரைவில் விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு காவல் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அமைச்சர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X