For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டான்சி ஆவணங்களைக் கேட்டு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதா சம்பந்தப்பட்ட டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் மேல் முறையீட்டுவிசாரணை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் தன்னிடம் வழங்குமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில்அரசு சிறப்பு வழக்கறிஞர் இன்று (திங்கள்கிழமை) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

டான்சி மற்றும் ஓட்டல் வழக்குகளில் தனி நீதிமன்றம் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை எதிர்த்து, சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார் ஜெயலலிதா.

இந்த மனு மீதான விசாரணை, கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்குஇடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வெங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதன்படி, இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக, கடந்த 30ம் தேதி உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, டான்சி வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி, கடந்த வாரம் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது. மேலும், அக்டோபர் 1ம் தேதிக்கு முன் இந்த வழக்கு விசாரணை நடைபெறக் கூடாது என்றும்,விசாரணை தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞர் வெங்கடபதிக்கு ஒரு வாரத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு விசாரணை சம்பந்தப்பட்டஆவணங்கள் அனைத்தையும் தன்னிடம் அளிக்குமாறு, முறைப்படியான மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றப்பதிவாளரிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தால் வழக்கறிஞர் வெங்கடபதி.

இந்த வழக்குகளில் ஜெயலலிதா அளித்த வாக்குமூலங்கள், குற்றப் பத்திரிக்கைகள் உள்பட பல்வேறுஆவணங்களைத் தன்னிடம் அளிக்குமாறு வழக்கறிஞர் வெங்கடபதி அம்மனுவில் கேட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X