For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் பெருகி வரும் சாப்ட்வேர் திருட்டுகள்

By Staff
Google Oneindia Tamil News

பாங்காக்:

இந்தியாவில் ஆண்டுதோறும் சாப்ட்வேர் திருட்டுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்று "பிசினஸ்சாப்ட்வேர் அல்லையன்ஸ்" என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், சராசரியாக 63 சதவீத சாப்ட்வேர் திருட்டுக்கள் இந்தியாவில் நடந்துள்ளன. அதற்குமுந்தைய ஆண்டு 61 சதவீத சாப்ட்வேர் திருட்டுக்கள் மட்டுமே நடந்துள்ளதாக அந்நிறுவனத்தின் புள்ளி விவரங்கள்தெரிவித்துள்ளன.

இந்தியாவில் மட்டும்தான் என்று பார்த்தால், ஆசிய-பசிபிக் நாடுகள் முழுவதிலும் இந்த சாப்ட்வேர் திருட்டுக்கள்நடந்து வருவதையும் அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

முந்தைய ஆண்டின் 47 சதவீத்தைவிட, கடந்த ஆண்டு சராசரியாக 51 சதவீத திருட்டுக்கள் இந்நாடுகளில்நடந்துள்ளன. இதன்மூலம் ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சீனாவில் 94 சதவீதமும், கொரியாவில் 56 சதவீதமும் மற்றும் ஜப்பானில் 37 சதவீதமும் சாப்ட்வேர்திருட்டுக்கள் நடந்துள்ளன. இவை அதற்கு முந்தைய ஆண்டில், முறையே 91 சதவீதம், 50 சதவீதம் மற்றும் 31சதவீதம் என்றுதான் இருந்துள்ளன.

தாய்லாந்தில் மட்டுமே இந்த சாப்ட்வேர் திருட்டுக்கள் குறைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அங்கு 81சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக, சாப்ட்வேர் திருட்டுக்கள் குறைந்துள்ளன.

நாள்தோறும் பெருகிவரும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கைதான், இந்தத் திருட்டுகளுக்குக் காரணம் என்றும்"பிசினஸ் சாப்ட்வேர் அல்லையன்ஸ்" கூறுகிறது.

மக்களும், நிறுவனங்களும் கம்ப்யூட்டர்களை மட்டும் விலை கொடுத்து வாங்கிக் குவிக்கிறார்களே தவிர,சாப்ட்வேரையும் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு தோன்றுவதில்லை.

ஒரு சாப்ட்வேரின் ஓரிரண்டு ஒரிஜினல் நகல்களை மட்டும் விலை கொடுத்து வாங்கும் ஒரு கம்பெனி,அக்கம்பெனியிலுள்ள நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களுக்கும் அதே சாப்ட்வேரையே பயன்படுத்திக்கொள்கிறது.

"இதுகூட சாப்ட்வேர் திருட்டுதான்" என்று "பிசினஸ் சாப்ட்வேர் அல்லையன்ஸ்" ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X