காங்கிரசில் சேருகிறார் ஹாரூண்
சென்னை:
தமிழக முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் தலைவர் ஜே.எம். ஹாரூண் வரும் 16ம் தேதி காங்கிரசில் இணையவுள்ளார்.
காங்கிரசில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காலஞ்சென்ற மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது ஹாரூண் காங்கிரசிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தார்.
1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் த.மா.கா. சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். இதையடுத்து அவர் த.மா.காவின் சிறுபான்மை பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது த.மா.காவிலிருந்து விலகி தமிழக முஸ்லிம் ஐக்கிய ஜமாத் என்றகட்சியை தொடங்கி தி.மு.க. ஆதரவுடன் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் அவர்வெற்றி பெறவில்லை.
தற்போது அவர் மீண்டும் காங்கிரசில் சேரமுடிவெடுத்துள்ளார். வரும் 16ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையவுள்ளார் ஹாரூண்.