ஒசாமா பின் லேடன் தான் காரணம்
நியூயார்க்:
அமெரிக்காவின் மீது நடந்துள்ள இந்தத் தாக்குதல்களுக்கு ஒசாமா பின் லேடன் தான் காரணம் என அமெரிக்கா நம்புகிறது.
இந்தக் தாக்குதலை பின் லேடன் நடத்தவில்லை என அவருக்கு புகலிடம் கொடுத்து வரும் ஆப்கானிஸ்தான் அரசு மறுத்துள்ளது.இது போன்ற ஒரு தாக்குதலை தனிப்பட்ட மனிதர் நடத்த முடியாது. ஒரு நாடே திட்டமிட்டு நடத்தினால் மட்டுமே இது முடியும்.
இப்படிப்பட்ட தாக்குதலை நடத்த எங்களுக்கு பலம் இல்லை எனவும் ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.
ஆனால், இத் தாக்குதலை பின் லேடன் தான் நடத்தியுள்ளார் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
ஒசாமாவின் குழுவில் உள்ள எகிப்து, அல்ஜீரிய நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் இநத்த் தாக்குதல்களை நடத்தியிருக்கவேண்டும் என பாதுகாப்புத்துறை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பெரும்பாலான பொதுமக்களும் இத் தாக்குதல்களுக்கு ஒசாமா பின் லேடன் தான் காரணம் என்று கூறுகின்றனர்.