For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பென்டகனில் 800 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமைச் செயலகமான பென்டகன் கட்டடத்தை விமானத்தால் மோதித்தாக்கியதில், அந்த அலுவலகத்தில் இருந்த 800 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவுக்குச் சொந்தமான 4 விமானங்களைக் கடத்திய தீவிரவாதிகள், 2 விமானங்களை நியூயார்க்கிலுள்ள 2உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மீது மோதச் செய்தனர்.

இதில் 110 மாடிகளைக் கொண்ட 2வது கட்டடம் அப்படியே இடிந்து, தரைமட்டமானது. இக்கட்டடத்தில் இருந்த10,000க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், 3வது விமானம் பென்டகனைத் தாக்கியது. பென்டகனின் தாக்குதலுக்குள்ளான பகுதி, சமீப காலத்தில்அவ்வளவாகப் பயன்படுத்தப் படாமல்தான் இருந்ததாம்.

இருப்பினும், தாக்குதலுக்குள்ளானபோது, அவ்விடத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தாக்குதலில், 800க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X