தீவிரவாதிகளை ஒழிக்க சர்வதேச படை: இந்தியா யோசனை
டெல்லி:
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரவாதத்தை ஒழிக்க உலக அளவில் ஒரு படைஅமைக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அத்வானி கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் சில அரசியல் நோக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டுவருகிறார்கள்.
அவர்கள் ஒன்றுமறியாத அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதன் மூலம், தங்கள் நோக்கங்கள்வெற்றிபெற்றுவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை எல்லைதாண்டிய பயங்கரவாதம் பெரிய பிரச்சனையாக இருந்துவருகிறது.
இவ்வாறு அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஜனநாயகத்திற்கு தீவிரவாதிகள் விடும் சவாலைச் சமாளிக்க உலகநாடுகள் அனைத்தும் பங்குபெறும் தனிப்படை அமைக்க வேண்டும்.
இந்த முயற்சியை இந்தியா கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது.
இந்த முயற்சிக்கு தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளின் ஆதரவுகிடைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களின் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான அனைத்து நாடுகளின் ஒற்றுமை பலப்படும் என்று நம்பலாம்.
தீவிரவாதிகளின் இதுபோன்ற வன்முறைச் செயல்களைத் தடுத்து அவர்களை முற்றிலும் ஒழிக்க உலகம் தழுவியதனிப்படை அமைப்பது அவசியம் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். இவ்வாறு அத்வானி கூறினார்.