For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பின் லேடன்: பாகிஸ்தான் அதிபருக்கு ஜார்ஜ் புஷ் கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களிடம் பேசி சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம்ஒப்படைக்கச் செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை சந்தித்துப் பேசிய அமெரிக்கத் தூதர் வெண்டி சேம்பர்லின் அவரிடம் ஒருகடிதத்தைக் கொடுத்தார். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்துஉடனடியாக தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

ஆனால், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தலிபான் அரசுக்கும் நெருக்கமாக உள்ள பாகிஸ்தான் பின்லேடனைப் பிடிக்க அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என அதில் புஷ் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆபகானிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறி வருவதை ஏற்கமுடியாது என்றும் அமெரிக்கா தெளிவாகக் கூறிவிட்டது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீனா லோதி நேற்று அவசர அவசரமாக அமெரிக்க வெளியுவுத்துறைத்துறை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜை சந்தித்துப் பேசினார். அவரிடம் பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின்வெறுப்பை ஆர்மிடேஜ் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுன்சர் கூறுகையில், இந்த விவகாரத்தில்பாகிஸ்தானுடன் பேசி வருகிறோம். தொடர்ந்து அந் நாட்டுடன் பேசுவோம் என்றார்.

இந்தக் கடத்தல்காரர்கள் விஷயத்தில் பாகிஸ்தான் தான் எங்களுக்கு உதவ வேண்டும் என வெளியுறவுத்துறைஅமைச்சர் காலின் பாவல் ஏற்கனவே கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஒட்டுமொத்த வெறுப்புப் பார்வையும் பாகிஸ்தான் மீது விழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X