For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கையில் பலத்த பாதுகாப்பு
கொழும்பு:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை விமானநிலையம் மற்றும் 37 மாடிக் கட்டிடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 24ம் தேதி விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளானதிலிருந்தே, இந்த விமான நிலையத்தில்பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
37 மாடிக் கட்டடமும் ஒரு உலக வர்த்தக மையம்தான். அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தில் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளதால், இந்த மையமும் தாக்கப்படும் என்ற சந்தேகத்தின் பேரில், இங்கும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 2 இடங்கள் மட்டுமில்லாமல், இலங்கையின் முக்கிய அரசு நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் தாக்குதல் நடந்துள்ள நிலையில், எதுவும் நடக்கலாம் என்று அச்சத்தோடு இருக்கிறதுஇலங்கை.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]