பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஐரோப்பிய தூதரக அதிகாரிகள்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் நடத்தும் எனக் கருதப்படுவதால் அண்டை நாடானபாகிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாட்டுத் தூதரகங்களின் அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியேறஆரம்பித்துள்ளனர்.
தேவைப்பட்டால் இந்த எஞ்சியிருக்கும் ஊழியர்களும் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற உடனடிவிசாக்கள் வழங்கத் தயாராக இருக்குமாறு இந்தியா போன்ற அருகாமை நாடுகளிடம் இந்த நாடுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டனர்.
பாகிஸ்தானில் தான் தனது தளத்தை அமைத்து ஆப்கானிஸ்தானைத் தாக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தூதரக ஊழியர்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆபத்து வரும்எனக் கருதப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் ஒரு மாதம் டூர் மேற்கொள்ள இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டது.