70 மாடிகள் படிகள் வழியே இறங்கி ஓடித் தப்பிய இந்தியர்
நியூயார்க்:
இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜெயப்பிரகாஷ் என்பவர் நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தில்விமானம் தாக்கியவுடன் 70-வது மாடியிலிருந்து படிகள் மூலம் இறங்கி உயிர் தப்பினார்.
விபத்திலிருந்து தப்பியது பற்றி அவர் கூறியதாவது,
எங்கள் மைன்ட் ட்ரீ கன்சல்ட்டிங் கோ. என்ற நிறுவனம் நேற்று தீவிரவாதிகளின் விமானத் தாக்குதலுக்கு பலியாகிநொறுங்கித் தரைமட்டமான உலக வர்த்தக நிறுவனக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் சாப்ட் வேர் இன்ஜினியர்களாகப் நான் பணியாற்றுகிறேன். அந்த 110 மாடிக் கட்டிடத்தின் 70மாடியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று விமானம் தாக்கியதால்ஒட்டுமொத்தக் கட்டிடமே ஆடியது. உடனே சுதாரித்துக்கொண்டு அனைவரும் ஓடினார்கள். அவர்களுடன் நானும்,என்னுடன் பணிபுரியும் பிரின்ஸ் இம்மானுவல் என்பவரும் ஓடினோம்.
நான் படிகள் வழியகவே வேகமாக இறங்கிவந்தேன். பிரின்ஸ் மட்டும் மற்றவர்களுடன் சேர்ந்து லிப்ட்டில்ஏறினார். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. நான் உயிர் பிழைத்தது தெய்வச் செயல்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.