For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

ஜெரிகோ:

இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனியர்களின் பகுதிகளில் நுழைந்து கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.இதில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை திடீரென வெஸ்ட் பேங்க் பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய டாங்கிகள் ஜெனின், ஜெரிக்கோ ஆகியபகுதிகளில் தாக்குதல் நடத்தின. அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலை சில பாலஸ்தீன அமைப்புகள்கொண்டாடி வரும் நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் இத் தாக்குதலைநடத்தியுள்ளது.

இஸ்ரேலை பாலதீனிய தீவிரவாதிகள் மிரட்ட ஆரம்பித்ததால் தான் இத் தாக்குதலை நடத்தினோம் என இஸ்ரேல்ராணுவம் கூறியுள்ளது.

ஆனால், அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலை சாக்காக வைத்துக் கொண்டு தங்களை இஸ்ரேல்கண்மூடித்தனமாக தாக்குவதாக பாலஸ்தீன மக்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா தலையீடு:

இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரான்மற்றும் பாலஸ்தீன அதிபர் யாஷர் அராபத் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். இரு நாடுகளும்உடனடியாக பேச்சு நடத்தி அமைதியை நிலை நாட்டுமாறு கேட்டுக் கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X