ஆப்கன் அரசு விமானங்களில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்
நியூயார்க்:
அமெரிக்காவில் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் விமானநிறுவனமான ஏரியனாவில் தான் பயிற்சி அளிக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தரும் விவரம் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 14 தீவிரவாதிகளுக்கு விமானம் ஓட்ட பயிற்சி அளித்ததாக ஆப்கான் நாட்டு விமான நிறுவனத்தின்முன்னாள் பைலட் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் விமானத் தளத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தாங்கள் கடத்திய விமானங்களின் பைலட்களை கத்தியால் குத்தி விட்டு அல்லது அவர்களைதாக்கிவிட்டு இந்தத் தீவிரவாதிகள் தான் விமானங்களை ஓட்டியுள்ளனர் என்பது நிரூபணமாகிவிட்டது.
இவர்களில் சிலர் புளோரிடா விமான மையத்தில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளனர்.
விமானத்தைக் கடத்தியவுடன் டிரான்ஸ்பான்டர்களையும் துண்டித்துள்ளனர். இதனால் விமானம் எங்கு பறக்கிறதுஎன்பதை கட்டுப்பாட்டு மைய ரேடார்களால் அறிய முடியாமல் போய்விட்டது.
இவர்கள் விமானங்களின் கருப்புப் பெட்டிகளையும் துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.