For Daily Alerts
Just In
அமெரிக்காவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்
டெக்ஸஸ்:
அமெரிக்காவின் உடா மாகாணத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
பயணிகள் ரயிலில் 100 முதல் 300 பேர் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்களில் மருத்துவக் குழுக்களும் மீட்புக் குழுக்களும் விரைந்துள்ளன.
சால்ட் லேக் சிட்டியில் இருந்து போலீசாரும் விரைந்துள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதலால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டதால் ரயில்களில் தான் பயணிகள் சென்றுகொண்டுள்ளனர்.
இது தீவிரவாதிகளின் செயலா அல்லது விபத்தா என்று உடனடியாகத் தெரியவில்லை. எத்தனை பேர் இறந்தார்கள்,காயமடைந்தார்கள் என்றும் தெரியவில்லை.
Comments
Story first published: Thursday, September 13, 2001, 5:30 [IST]