21ம் தேதி: தீவிரவாத எதிர்பு தினம்- பா.ஜ.க. அனுஷ்டிக்கிறது
டெல்லி:
வரும் 21ம் தேதியை தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்க பாரதிய ஜனதா கட்டிமுடிவு செய்துள்ளது.
தீவிரவாதத்தின் அபாயம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், மனித நேயம்காக்கப்பட வேண்டியதன் என்பதற்காகவும் தீவிரவாத எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படஉள்ளது என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம்கூறியதாவது:
தீவிரவாதத்தை எல்லா அரசியல் கட்சிகளும் கட்சி பாகுபாடு இல்லாமல் எதிர்க்கவேண்டும். உலக அளவில் தீவிரவாதம் பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்தீவிரவாதம் எங்கு பரவினாலும் அதை எதிர்ப்போம் என்று கூறியிருப்பதைவரவேற்கிறோம்.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள்பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான்அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கான்டஹாருக்கு கடத்தியவர்களும்பாகிஸ்தானில்தான் இருக்கிறார்கள். தீவிரவாதிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்றார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆக்ரா உச்சி மாநாட்டின்போதுதீவிரவாதிகளை ஆதரித்து பேசினார். அவர் அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள்என்றும் வர்ணித்தார் என்றும் மோடி கூறினார்.