பின்லேடன் தான் காரணம்... அமெரிக்கா உறுதி
வாஷிங்டன்:
நியூயார்க், வாஷிங்டன் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலுக்கு, சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் போவெல் கூறியுள்ளார்.
இதே சமயம் அரபு நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எப்.பி.ஐயாலும்,தீவிரவாதி தடுப்பு போலீசாராலும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
நியூயார்க் மீதும் வாஷிங்டன் மீதும் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் 21ம் நூற்றாண்டின் முதல் போர் என்றுஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் வில்லியம் புஷ் கூறியுள்ளார். தீவிரவாதிகளுக்கான போரில் வெல்ல வேண்டும்அமெரிக்க அதிபர் புஷ் கண்ணீர் வழியும் கண்களுடன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "நான் பாசமான மனிதன். அதே சமயம் நான் வேறு ஒருவிதமான மனிதன். நான்செய்து முடிக்க பணிகள் பல உள்ளன. நான் அவற்றை செய்து முடிப்பேன்" என்று கூறினார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பால் வோல்ஃப்விட்ஸ் கூறுகையில், "தீவிரவாதிகளுக்கு பாதுகாப்புத்துறைதக்க பதிலடி கொடுக்கும். இதற்காக அமெரிக்க தனது பலம் முழுவதையும் பயன்படுத்தும்" என்று கூறினார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் புஷ், வெள்ளிக்கிழமையை துக்க தினமாகவும், நினைவு தினமாகவும் அறிவித்தார்.