சீக்கியர்கள் மீது தாக்குதல் - இந்தியத் தூதரகம் கண்டனம்
வாஷிங்டன்:
அராபியர்கள் என்று நினைத்து, இந்தியாவைச் சேர்ந்த பல சீக்கியர்கள் மீது அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்தியதை,அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதையடுத்து, அராபியர்களுக்கு எதிராக அமெரிக்கர்களின் கோபம் திரும்பியுள்ளது. அமெரிக்காவில், கண்ணில்படும் முஸ்லிம் மற்றும் அராபியர்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர் அமெரிக்கர்கள். அங்குள்ள மசூதிஒன்றம் இவர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.
இந்நிலையில், அராபியர்கள் என்று நினைத்து, இந்தியாவைச் சேர்ந்த பல சீக்கியர்களை அமெரிக்கர்கள்தாக்கியுள்ளனர்.
"சட்ட திட்டங்களுக்கும், அமைதிக்கும் பேர் போனவர்கள் சீக்கியர்கள். எப்போதும் வெளிப்படையாகப் பழகும்அவர்கள் மேல் அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என்று இந்தியத் தூதரகம்கூறியுள்ளது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், சீக்கியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,அமெரிக்கர்களும் அவர்கள் மேல் தாக்குதல் நடத்தியிருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் இந்தியத் தூதரகஅதிகாரி தெரிவித்துள்ளார்.