அராபியர்கள் என்ற சந்தேகத்தில் தாக்குதலுக்குள்ளான இந்தியர்கள்
நியூயார்க்:
அராபியர்கள் என்ற சந்தேகத்தில், அமெரிக்காவில் உள்ள சில இந்தியர்கள் மீது அமெரிக்க மக்கள் தாக்குதல்நடத்தியுள்ளனர். இதையடுத்து, இந்தியர்களை கவனமாக இருக்குமாறு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர்கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் அராபியர்கள் மீது அமெரிக்க மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிகமாக இந்தியர்களும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள்.சீக்கியர்கள் தாடிகளுடனும், தலைப்பாகையுடனும் இருப்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான்.
ஆனால், இதை அறியாத சில அமெரிக்கர்கள், இவர்கள் அராபியர்கள்தான் என்று நினைத்து, அவர்களைத்தாக்கியுள்ளனர்.
அதேபோல், இந்து பெண்கள் சேலையால் தலையை மூடிக் கொள்வது வழக்கம். இவர்களும் அராபியர்கள் தான்என்ற சந்தேகத்தில் இவர்கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர் அமெரிக்கர்கள்.
"அராபியர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. எனவே இந்தியர்கள் கவனமாகஇருக்க வேண்டும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்" என்று இந்தியத் தூதர்திரிபாதி அங்குள்ள இந்தியர்களை எச்சரித்துள்ளார்.