For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிறந்து 2 நாட்களில் குப்பைத் தொட்டிக்குப் போன பெண் சிசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே குப்பைத் தொட்டியில் பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசு கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை அருகேயுள்ளது கொடுங்கையூர். இங்குள்ள ஆர்.வி. நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் குழந்தைஅழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தோர் குப்பைத் தொட்டியில் பார்த்தபோது அங்குஒரு பெண் சிசு கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் அதிர்ச்சியுற்று குழந்தையை எடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.முதலுதவிக்குப் பின், பிறந்து 2 நாட்களே ஆகியிருந்த அந்தக் குழந்தை குறித்து டான்பாஸ்கோ அமைப்புக்குத்தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து டான்பாஸ்கோ அமைப்பினர் விரைந்து வந்து குழந்தையைப் பெற்றுக் கொண்டனர். பின்னர்அக்குழந்தை தி. நகரில் உள்ள பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X