மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை
சென்னை:
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
விடுதியின் 3-வது மாடியில் கார்த்திகேயனின் அறை உள்ளது. வியாழக்கிழமை வழக்கம் போல இரவு சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்த கார்த்திகேயன் அதன் பிறகு கதவைத் திறக்கவில்லை. அவருடன் அவரது நண்பர்கள் இரவு10 மணி வரையிலும் இருந்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் அவர்களது அறைகளுக்குப் போய் விட்டனர்.
இரவு 11 மணிக்கு மேல் கார்த்திகேயனுடன் படிக்கும் மாணவர் ஒருவர் அறைக் கதவைத் தட்டியபோது கதவுதிறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரும், மற்ற மாணவர்களும் விடுதி வார்டன் மற்றும் பூக்கடைபோலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து கார்த்திகேயன் இருந்த அறைக் கதவை உடைத்துத் திறந்தனர். அப்போதுகார்த்திகேயன் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
காதல் தோல்வி காரணமாக கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று மாணவர்கள் மத்தியில்பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் ராகிங் கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாமா என்பதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.