இந்தியா, பாகிஸ்தான் மீதான பொருளாதாரத் தடை நீக்கம்
வாஷிங்டன்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடையை நீக்கியது.
இந்நிலையில் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்தது. இதையடுத்து 2 நாடுகளுக்கிடையில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணியில் தொய்வு ஏற்பட்டது.
இதேபோல பாகிஸ்தானுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெருமளவுபாதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு அமெரிக்கவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்தார். இதனால் இந்திய -அமெரிக்க உறவு மேம்பட்டது.
தற்போது தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன், இந்தியா இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்தது. மேலும் 2 ஜனநாயக நாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் என்பதால், இந்தியா மீதுஅமெரிக்காவுக்கு இருந்த வெறுப்பு தணிந்தது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆப்கான் போரில் பாகிஸ்தானின் தேவை பல வழிகளில் உள்ளது. தாக்குதல் களம், மற்றும்மதப்போர் என்ற கருத்தை மறைக்க என்று பாகிஸ்தானின் அவசியம் அமெரிக்காவிற்கு இப்போது அதிகரித்துள்ளது.
இதையடுத்து இந்த 2 நாடுகள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.