பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வேன்- சு.சுவாமி எச்சரிக்கை
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சட்டத்துக்கு புறம்பாக பேட்டியளித்தால் கோர்ட்டில் வழக்குத் தொடர்வேன்என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு நிருபர்களுக்குப் பேட்டியளித்த பன்னீர்செல்வம், நடப்பது அம்மா ஆட்சிதான்என்றும் தான் முதல்வரானது தற்காலிக முடிவுதான் என்றும் கூறினார்.
இதற்கு சுவாமி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்கூறியதாவது,
தமிழகத்தின் புதிய முதல்வர் தனது பேட்டியில் நடப்பது அம்மாவின் (ஜெயலலிதாவின்) ஆட்சிதான் என்றும் தான்தற்காலிக முதல்வர்தான் என்றும் கூறியுள்ளார்.
இது சட்டவிரோதமானதாகும். மேலும் அம்மாவின் வழிகாட்டுதலின் படி திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றும்கூறியுள்ளார். இது முதல்வராகப் பதவியேற்கும்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முரணானதாகும்.
பிறகு போயஸ் கார்டனுக்கு, அதாவது ஜெயலலிதாவின் வீட்டுக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள அவர்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முதல்வரின் இந்த முடிவு அவர் எடுத்துக்கொண்ட ரகசியக் காப்புப் பிரமாணத்திற்கு எதிரான முடிவாகும்.
தொடர்ந்து முதல்வர் இவ்வாறு பேசிவந்தால் அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்வேன் என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு சுவாமி கூறினார்.