For Daily Alerts
Just In
மீண்டும் ஒரு பாக். குழு ஆப்கான் விரைந்தது
இஸ்லமாபாத்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கோரி தலிபான் தலைவர் முகமது முல்லாஒமரைச் சந்தித்து வலியுறுத்த மீண்டும் ஒரு பாகிஸ்தான் குழு ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது.
2 வாரங்களுக்கு முன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவர் தலைமையில் ஒரு குழுஆப்கானிஸ்தான் சென்று தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஒசாமா பின் லேடனைஒப்படைக்குமாறு அவர்கள் தலிபான் அரசைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந் நிலையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும்ஒரு குழு காண்டஹார் விரைந்துள்ளது.
இந்த குழுவில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தலிபான் தலைவர் முல்லா ஒமரை சந்தித்து பின் லேடனைஅமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த உள்ளார்கள்.
Comments
Story first published: Thursday, September 27, 2001, 5:30 [IST]