தலிபான்களிடம் பிடிபட்ட 3 அமெரிக்க ராணுவத்தினர்
தோஹா (ஆப்கானிஸ்தான்):
ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 3 அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர் தலிபான்களிடம்பிடிபட்டனர்.
இவர்களிடம் இருந்து ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா அமைப்பு குறித்த ஆவணங்களை தலிபான்கள்பறித்தனர்.
ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே இந்த 5 பேரும் தலிபான்களிடம் சிக்கினர்.
ஏற்கனவே கடந்த வாரம் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 5 பிரிட்டிஷ் ராணுவ சிறப்புப்படையினர் தலிபான்களிடம் பிடிபட இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் துப்பாக்கித்தாக்குதல் நடத்திவிட்டு தலிபான்களிடம் இருந்து தப்பிவிட்டனர்.
ஆனால், இப்போது அமெரிக்கப் படையினரை தலிபான்கள் பிடித்துச் சென்றுவிட்டனர்.
இத் தகவைல கத்தார் நாட்டின் அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த டிவி மட்டும் தான் இப்போதும்ஆப்கானிஸ்தானுக்குள் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து படம் பிடித்துஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.