For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ரயில் நிலையத்தில் 27 அழகிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூர் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நின்றுகொண்டிருந்த 27விலை மாதர்கள் போலீசார் கைது செய்தனர்.

சென்னை ரயில் நிலையத்தில் சங்கிலி பறிப்பு, மற்றும் ஜேப்படித் திருடர்களைப் தடுப்பதற்காக போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக 2 பெண்கள் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், அவர்கள் 2 பேரும் விலை மாதர்கள் என்பது தெரியவந்தது.

உடனே இதுபோல ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளில் நிற்கும் விலை மாதர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

மொத்தம் 10 பேரை இவ்வாறு போலீசார் கைது செய்தனர்.

இதுபோல புறநகர் ரயில்களில் பயணித்துக் கொண்டே வாடிக்கையாளர்களை வசப்படுத்தி அழைத்துச் செல்லும்அழகிகள் 17 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X