For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதிகள் தாக்குதல்: சாவு எண்ணிக்கை 42 ஆனது

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

காஷ்மீர் சட்டசபையில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதில், தாக்குதல்நடத்திய 3 தீவிரவாதிகளும் அடங்குவர்.

டாடா சுமோவில் குண்டுகளை நிரப்பிக் கொண்டு சட்டசபையில் வளாகத்தில் தீவிரவாதிகள் மோதினர். இதில் 20 பொது மக்களும்,ராணுவத்தினரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இவர்களில் மேலும் 22 பேர் இறந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தீவிரவாதத் தாக்குதலை பாகிஸ்தான் தான் திட்டமிட்டு நடத்தியுள்ளது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில்இருந்து இயங்கி வரும் ஜெயிஷ்-ஏ-முகம்மத் என்ற தீவிரவாத அமைப்பு தான் இத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த அமைப்பைச் செர்ந்த வஜாஹத் உசேன் என்பவன் தான் காரில் குண்டு நிரப்பிக் கொண்டு வந்து மோதினான்.

முதலில் நாங்கள் தான் இத் தாக்குதலை நடத்தினோம் என ஒப்புக் கொண்ட ஜெயிஷ்-ஏ-முகம்மத் இப்போது பின் வாங்கியுள்ளது.தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று மறுத்துள்ளது.

இந்தத் தீவிரவாத அமைப்பை அமெரிக்கா தடை செய்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே பாகிஸ்தான் அரசின்அறிவுறுத்தலின்பேரில் இந்த அமைப்பு பல்டி அடித்துள்ளதாக இந்தியா கருதுகிறது.

அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X