For Daily Alerts
Just In
உள்ளாட்சித் தேர்தல் - 7342 பேர் போட்டியின்றித் தேர்வு
சென்னை:
தமிழகத்தில் 7342 ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல்செய்துள்ளதால் அவர்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை புதன்கிழமை நடந்தது. அதன்பிறகு மா-நில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், மொத்த-முள்ள 1,31,560காலியிடங்களுக்கு 4,77,407 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இவற்றில் மொத்தம் 105 ஊரக உள்ளாட்சி காலியிடங்கள் மற்றும் 9 -நகர்ப்புறஉள்ளாட்சி காலியிடங்களுக்கு வேட்பாளர்கள் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதுதவிர மொத்தம் 7342 பதவியிடங்களுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் யாரும் 5ம் தேதிக்குள் வாபஸ் பெறாவிட்டால் இவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர்என்றுகூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, October 4, 2001, 5:30 [IST]