காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறது மார்க்சிஸ்ட்
சென்னை:
வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளது.
இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாகநடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுகதலைமையில் 10 கட்சிகள் கொண்ட கூட்டணியும் போட்டியிடுகின்றன.
விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்தனித்தனியே போட்டியிடுகின்றன.
அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால்அதிமுக கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறி தனித்துபோட்டியிட முடிவு செய்தது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை காங்கிரஸ் கூட்டணியில் இணைக்கும்முயற்சியில் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன் ஈடுபட்டார்.
அவர் நடத்திய பேச்சுவார்த்தையில் நேற்று (வெள்ளிக்கிழமை) உடன்பாடுஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மதுரை மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்தநாகலிங்கம் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில்காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றது முக்கியத்துவம் பெறுகிறது.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்இணைவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கூட்டணி குறித்து இரு கட்சிகளும் அதிகாரபூர்வமானதகவல் எதையும் வெளியிடவில்லை.