காங்கிரசுடன் எந்த உறவும் இல்லை - மார்க்சிஸ்ட்
சென்னை:
காங்கிரசுக்கும் எங்களுக்கும் எந்விதத் தேர்தல் உடன்பாடும் இல்லை. மதுரை மேயர் தேர்தலுக்கான வேட்பாளரைஅவர்களாகவே வாபஸ் பெற்றுக் கொண்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்சங்கரையா கூறினார்.
சென்யிைல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ாட்சித் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.அறிக்கையை வெளியிட்ட பின்னர் சங்கரையா நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திமுகவைத் தவிர மதசார்பற்ற கட்சிகள் மற்றும் நேர்மையான சுயேச்சை வேட்பாளர்களை நாங்கள் போட்டியிடாதஇடங்களில் ஆதரிப்போம்.
காங்கிரசுக்கும் எங்களுக்கும் எந்விதத் தேர்தல் உடன்பாடும் இல்லை. மதுரையில் அவர்களாகவே வாபஸ்பெற்றுககொண்டார்கள். ஆனால் எந்தக் கட்சியாவது எங்களை ஆதரித்தால் வேண்டாம் என்றா சொல்வோம்?
மதசார்பற்ற கட்சிகளான அதிமுக, காங்கிரஸ் மற்றும அந்தக் கூட்டணிகளில் உள்ள கட்சிகளையும் நாங்கள்ஆதரிப்போம்.
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில், அவர்கள் சதவீத அடிப்படையில் இடப்பங்கீடு செய்வதாகச்சொன்னார்கள். நாங்கள் தொகுதி அடிப்படையில் இடங்கீடு செய்யவேண்டும் என்று சொன்னோம். இதுதான்பிரச்சனை. இந்த விஷயத்தில் அதிமுகத் தலைமை சரியான அளுகுமுறையை கையாளவில்லை.
இதனால் நாங்கள் கூட்டணியில் இருந்து விலகமுடிவெடுத்தோம்.
நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக மற்றும அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தவிர யார்கேட்டாலும் ஆதரவு தருவோம். மேலும் சுயேச்சை வேட்பாளர்களில் நேர்மையானவர்களை நாங்கள்ஆதரிப்போம்.
இவ்வாறு சங்கரையா கூறினார்.