For Daily Alerts
Just In
கூட்டம் நடத்தியதே "வேஸ்ட்" - கர்நாடகம்
டெல்லி:
தமிழகத்தில் மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியமில்லை என்றுகர்நாடகம் கூறியுள்ளது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடகமுதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில் இந்தக் கூட்டத்தை இப்போது கூட்டியிருக்க வேண்டிய அவசியமேஇல்லை என்றார்.
தமிழகத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் காவிரி நதி நீர்ஆணையத்தை அவசரமாக கூட்டியிருக்க வேண்டியதில்லை என்றார் கிருஷ்ணா.
காவி-ரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் மழையே பயிர்களுக்கு போதுமானது என்று கூறிய அவர்கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டார்.
Comments
Story first published: Wednesday, October 10, 2001, 5:30 [IST]