For Quick Alerts
For Daily Alerts
Just In
பிரசாரம் முடியப் போகும் நேரத்தில்...
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதிய நீதிக் கட்சி தனது தேர்தல்பணிக்குழுத் தலைவரை நியமனம் செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போட்டியாக திடீர் திடீர் என அணி மாறி தமிழக மக்களை அசத்திக் கொண்டிருக்கும்புதிய நீதிக் கட்சி, தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலை தெம்பாகசந்தித்துக் கொண்டுள்ளது.
பிரசாரம் முடியப் போகும் நேரத்தில் இப்போதுதான் அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவர் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
ஏ. ரவிக்குமார் என்பவர் தேர்தல் பணிக்குழுவின் தலைமை நலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகஅக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Wednesday, October 10, 2001, 5:30 [IST]