For Daily Alerts
Just In
ஈவ் டீசிங்: பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
சென்னை: ஈவ் டீசிங்கைத் தடுக்க சென்னையில் உள்ள அனைத்துப் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நாளை முதல்போலீஸ் பாதுகாப்புப் போடப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறினார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் சமீப காலமாக ஈவ் டீசிங்கொடுமை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னையில் பெருகிவரும் ஈவ்டீசிங் கொடுமைகளைத் தடுக்க ஒவ்வொரு பெண்கள் கல்லூரி மற்றும்பள்ளியிலும் போலீஸ் பாதுகாப்புப் போடப்படும்.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த பாதுகாப்பு நடைமுறைக்கு வரும் என்று முத்துக்கருப்பன் கூறினார்.
Comments
English summary
eve teasing: police security for all womens colleges and schools.