For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலவச காலணி ஊழல் - மாஜி அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்ஈஸ்வரமூர்த்தி நேற்று (புதன்கிழமை) மூன்றாவது தனி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக பதவி வகித்த போது மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக செருப்புவழங்கியதில் ஊழல் செய்ததாக, முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 21 பேர் மீதுகடந்த திமுக ஆட்சியின் போது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்திஆஜராகவில்லை. அவரது சார்பில் அவர் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து மூன்றாவது தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் ஈஸ்வர மூர்த்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி புதன்கிழமை மூன்றாவது தனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவருக்குபிறப்பித்திருந்த பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X