For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேகமாக நிரம்பி வரும் சாத்தனூர் அணை

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பிவருவதால், ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில்உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை ஆரம்பித்து கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் நல்லமழை பெய்துவருகிறது.இதனால் குடிநீர்ப்பஞ்சம் தீர்ந்ததுடன், அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்துவருகிறது.

திருவண்ணாமலை அருகில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.அணையின் மொத்தக் கொள்ளளவான 119 அடியில், 115 அடி வரை தண்ணீர் நிரம்பிவிட்டது.

அணையிலிருந்து பாசனத்திற்காகத் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாவட்ட நிர்வாகம்கேட்டுக்கொண்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X