சென்னையில் 353 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் வேண்டும் - கருணாநிதி
சென்னை:
சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன்கூறியுள்ள நிலையில், 353 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நேற்று) நடந்த முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் மட்டும் அதிக அளவில்வன்முறைகளும், வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதலும், கள்ள ஓட்டுப் போடுதலும் நடைபெற்றுள்ளன.
இதையடுத்து, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் நேற்று கருணாநிதி ஆலோசனை நடத்தினார். சுமார்ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பின் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவினரோடு போலீசாரும் சேர்ந்து கொண்டுதான் நேற்றைய வாக்குப் பதிவின்போது அராஜகத்தில்ஈடுபட்டனர். பல இடங்களில் வன்முறையிலும் ஈடுபட்டனர்.
சென்னையில் மட்டும் 353 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவதற்காக தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்கமுடிவு செய்துள்ளோம் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று கருணாநிதி கூறினார்.