இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதட்டம்
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் திடீரென்று தாக்கியதை அடுத்து,அப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த தாக்குதலை எதிர்பார்க்காத பாகிஸ்தான் ராணுவம் நிலை குலைந்து போனது. இந்தியா நடத்திய தாக்குதலில்பாகிஸ்தான் எல்லை பகுதியிலிருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் சேதமடைந்தன. பாகிஸ்தான் ராணுவமும் பதில்தாக்குதல் நடத்தியது.
பாதுகாப்புத் துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் "மனிதாபிமானம் இல்லாமல்சுட்டுத் தள்ளுங்கள்" என்று இந்திய ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் தன்னுடைய எல்லைப் பகுதிமுழுவதையும் விழிப்புடன் பாகிஸ்தான் ராணுவம் கண்காணித்து வருகிறது.
மேலும் பெர்னாண்டசின் பேச்சையும் பாகிஸ்தான் வன்மையாகக் கண்டித்துள்ளது. "பொறுப்பற்ற தன்மையுடன்பேசியுள்ளார் பெர்னாண்டஸ்" என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரஷித் குரேசிதெரிவித்துள்ளார்.