For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சிவகங்கை:

கடந்த 1998ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரூசோ கொலை செய்யப்பட்டவழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவின் அண்ணன் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கைநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தின் திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்து வந்தவர் ரூசோ. இவர்தேவகோட்டையைச் சேர்ந்தவர். இவர் மு.க. ஸ்டாலினுக்கும் மிக நெருக்கமானவர்.

சென்ற 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது ரூசோவைஅவருக்கு வீட்டுக்கு அருகை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது.

இந்த சம்பவம் சிவகங்கை மாவடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி.,முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரை கைது செய்தது.

இந்த வழக்கு விசாரரணை சிவகங்கை மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது ஜபரூல்லாகான்முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று (புதன்கிழமை) வழங்கினார் நீதிபதி.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம், சென்னை முத்து, தேவக்கோட்டைபோஸ், முருகன் ஆகியோர் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

தேவகோட்டையைச் சேர்ந்த காளிமுத்து, சுந்தரலிங்கம், காசிராஜா. பாலா, காசி, சிவகங்கை பழனி,மார்கண்சடான்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார், சுந்தரநடப்பு கார்த்திகைராஜா, ஆராவயல் பழனி ஆகியோருக்குஆயுள் தணடனையும் ரூ.10 ஆயிரமும் அபாரதம் விதிக்கப்படுகிறது.

அபராதத்தை கட்ட தவறினால் ஒவ்வொருவருக்கும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும்நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.

ஆயுள் தண்டனை பெற்றவர்களில் காளிமுத்து முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கத்தின் அண்ணன் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X