For Quick Alerts
For Daily Alerts
Just In
இந்திய கடற்படைத் தளங்களுக்கு தீவிர பாதுகாப்பு
கொச்சி:
கப்பற்படைக்குச் செந்தமான போர்க் கப்பல்கள் மற்றும் கடற்படைத் தளங்களுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னக கடல் பகுதியில் உள்ள தனது கடற்படைத் தளங்களுக்குதீவிரவாதிகளிடமிருந்து ஆபத்து வரலாம் என கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தள்ளது.
இதைத் தொடர்ந்து கப்பற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்கள் மற்றும் கப்பற்படைத் தளங்களுக்கும்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொச்சி கடற்படைத் தளத்தின் அருகே வர வேண்டாம் என மீன் பிடி படகுகள், சுற்றுலாப் படகுகள் உட்படஅனைத்து வித படகுகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தத் தளத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் தான்இந்தப் படகுகள் செல்லலாம்.
பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments