இலங்கையில் 4 தமிழ் கட்சிகள் கூட்டணி உதயம்
கொழும்பு:
இலங்கையில் 4 தமிழ் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து "தமிழ் தேசியவாத கூட்டணி" என்ற புதிய கூட்டணியை அமைத்து"உதய சூரியன்" சின்னத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளன.
இக்கட்சி தவிர தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ), ஆல் சிலோன் தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் புரட்சிவிடுதலை முன்னணி (சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரிவு) ஆகிய கட்சிகள்தான் இக்கூட்டணியை அமைத்துள்ளன.
முதலில் ஆல் சிலோன் தமிழ் காங்கிரஸ் கட்சி இக்கூட்டணியில் சேராமல் செல்லத்தான் முயற்சித்தது. ஆனால் மற்றகட்சிகளின் கடும் முயற்சிக்குப் பின்னரே அக்கட்சியின் தலைவர் ஏ. விநாயகமூர்த்தி ஒருவழியாக அசைந்துகொடுத்தார்.
இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் "ஈழப் படை" என்ற அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த எச்சரிக்கையின் விளைவுதான் இந்தக் கூட்டணி என்று கூறப்படுகிறது.
சென்ற வாரம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் இக்கட்சிகளைச் சேர்ந்த 9 பேர்தான் எம்.பிக்களாக இருந்தனர்.இந்த முறை அதிக எண்ணிக்கையில் எம்.பிக்களை நாடாளுமன்றத்தில் குவிக்க வேண்டும் என்பதுதான்இக்கூட்டணியின் குறிக்கோள்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.