For Daily Alerts
Just In
சட்டம்-ஒழுங்கு விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை வரும்
சென்னை:
தமிழக அரசு மீது சட்டம்-ஒழுங்கு தொடர்பாக வந்துள்ள புகார்கள் நியாயமாக இருந்தால், தகுந்த நடவடிக்கைஎடுக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு, வியாழக்கிழமை (இன்று) காலை டெல்லி கிளம்பும் முன் சென்னை விமான நிலையத்தில் அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக உள்பட பல கட்சிகள் தமிழக அரசின் மீது சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல புகார்கள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதற்கேற்றவாறு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்வாஜ்பாய்.
முன்னதாக, நேற்று இரவு வாஜ்பாய் சென்னை வந்து சேர்ந்தார். அவருடைய வருகையையொட்டி சென்னைமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தன.
Comments
Story first published: Thursday, October 18, 2001, 5:30 [IST]