இந்திய தபால்துறை உஷார்
டெல்லி:
தபால்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் பரப்பப்பட்டு வருவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் முழுபரிசோதனைக்கு உட்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2 வாரகாலமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளுக்குஅனுப்பி வருகின்றனர்.
இந்தப் பார்சலில் பஞ்சு போன்ற ஒரு பொருளுக்குள் அந்த கிருமி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதுபோன்ற தபால்கள் இந்தியாவுக்கும் வர ஆரம்பித்துவிட்டன.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதனை செய்த பிறகேநாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன என்று தபால்துறைச் செயலாளர் குப்தா கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளைப் பரப்பக் கூடும் என்பதால், வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும்தபால்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதனை செய்யப்படுகின்றன.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள சர்வதேச தபால்துறை விதிமுறைகள் அனைத்தையும் சரியாகப்பின்பற்றவேண்டும் என்று, தபால்களைப் பிரிக்கும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
அனைத்து சர்வதேச விமானநிலையங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் பரிசோதனைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தபால்களைப் பிரிக்கும் அதிகாரிகள் அனைவரும், முன்னெச்சரிக்கையாக கைகளில் கிளவுஸ் மற்றும் முகத்தில்மாஸ்க் அணிந்துகொண்டு பணியில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆந்த்ராக்ஸ் கிருமிகள் அடங்கிய பார்சல்களைக் கண்டறியும் கருவிகள் எதுவும் தற்போதைக்கு தபால்துறையிடம்இல்லை. ஆனால் தேவைப்படும்போது அதுசம்பந்தமான நிறுவனங்களிடம் உதவி கோர முடிவெடுத்துள்ளோம்.
மேலும் அமெரிக்காவிலிருந்து வரும் தபால்களும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்தபால்களும் நிறுத்தப்படவில்லை.
இவ்வாறு குப்தா கூறினார்.