For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதியாக நடைபெறும் மறு வாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த 16ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக இன்று மறுவாக்குப் பதிவுநடைபெறும் 306 இடங்களிலும் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்றுவரும் உள்ளாட்சித் தேர்தலில் கடந்த 16ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், 18ம் தேதிஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

16ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக 306 இடங்களில் மறுவாக்குப் பதிவுஇன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு சென்னையில் 43 இடங்களிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 263இடங்களிலும் மறுவாக்குப் பதிவு தொடங்கியது.

தற்போது வரை இந்த வாக்குச்சாவடிகளில் எந்த அசம்பாவிதமும் இன்றி வாக்குபதிவு அமைதியாகநடந்துவருகிறது. மறுவாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

சென்னையில் திருவாண்மியூர் பகுதியில் 16ம் தேதி நடந்த வாக்குப் பதிவின்போது வன்முறைக் கும்பல் கலவரத்தில்ஈடுபட்டதால் 2 வாக்குச் சாவடிகளில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்த 2வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவருகிறது.

வாக்களிக்க வந்த மக்கள் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாகவும், எந்தவித இடையூறும் இன்றிவாக்களிக்க முடிகிறது என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ராமநாதபுரத்தில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேரில், 2 பேர்நிலைமை கலைக்கிடமாக உள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது மதுரை அர மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X