For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தபால் நிலையங்களில் எக்ஸ்-ரே கருவி: இந்தியா நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்களைப் பிரிக்கும் 4 சர்வதேச தபால் நிலையங்களில் ஆந்த்ராக்ஸ் தடுப்புஆய்வகங்களை அமைக்கவும் எக்ஸ்-ரே கருவிகளை நிறுவவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மத்திய செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இன்று டெல்லி சர்வதேச தபால் நிலையத்துக்குச்சென்றார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

சென்னை, மும்பை, கல்கத்தா, டெல்லி ஆகிய நகர்களில் உள்ள சர்வதேச தபால் நிலையங்களில் உடனடியாகஎக்ஸ்-ரே கருவிகள் அமைக்கப்படும்.

வெளிநாட்டுத் தபால்களைப் பிரிக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு முகமூடிகள், கையுறைகளை அகியவையும்வழங்கப்படும். நாடு முழுவதும் ஆந்த்ராக்ஸ் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பெரியஅளவில் விளம்பரங்கள் செய்யப்படும்.

இந்தியாவில் ஆந்த்ராக்ஸ் குறித்து பதற்றமடையும் அளவுக்கு ஏதும் நடந்துவிடவில்லை. ஆனால், ஜாக்கிரதையாகஇருப்பது நல்லது.

நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. உள் நாட்டுத் தபால்கள் மூலமும் ஆந்த்ராக்ஸைப் பரப்பமுயற்சிகள் நடக்கலாம். எனவே, இதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூரியர் நிறுவனங்களும் இவ் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றார் பிரமோத் மகாஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X