For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றிபெற்றவர் யார் என்ற குழப்பம்- சிவகாசி அருகே பதட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்களில்வெற்றிபெற்றவர் பெயர் மாற்றி எழுதப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிவகாசி யூனியன் அலுவலகத்தைமுற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

சிவகாசி அருகே உள்ளது வடப்பட்டி. இந்தப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு முத்து ஈஸ்வரன் மற்றும்கருணாகரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வடப்பட்டி பஞ்சாயத்துதலைவராக முத்து ஈஸ்வரன் தேரந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தான்வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வாங்க யூனியன் ஆணையாளர் ராஜேந்திரனிடம் சென்றார்.

ஆனால் அவர் வைத்திருந்த சான்றிதழில் கருணாகரன் வெற்றிபெற்றதாக எழுதப்பட்டிருந்தது. இதனால் இத்துஈஸ்வரன் கோஷ்டியினருக்கும், கருணாகரன் கோஷ்டியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

பிறகு முத்து ஈஸவரன் தனது ஆதரவாளர்கள் சுமார் 500 பேருடன் யூனியன் அலுவலகம் முன்பு சென்றுபெயர்க்குழப்பம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பிறகு இதை எதிர்த்துத்தீக்குளிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இதனால் அந்தப் பகுதிகளில் பதட்டம் நிலவியது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வர்தயாள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X