For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துணை மேயராகிறார் கராத்தே தியாகராஜன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போலவேகராத்தே தியாகராஜன் போட்டியிடவுள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் மு.க.ஸ்டாலின் 5000 வாக்குகள்வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார். மேயர் பதவி திமுக வசம் இருந்தாலும், அதிககவுன்சிலர்கள் திமுகவிடம் இல்லை. அதிமுக கூட்டணியிடம் 82 கவுன்சிலர்கள்உள்ளனர்.

இந்த நிலையில் துணை மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும்சூழ்நிலை ஏற்பட்டது. அதிமுக சார்பில் கராத்தே தியாகராஜனுக்கு அந்த வாய்ப்புகிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடியவர், அதிமுகவுக்கு சாதகமாக சபையைநடத்திச் செல்லக் கூடியவர், திமுவினரை அடக்கும் தகுதி படைத்தவர் என்று பலகாரணங்களால் கராத்தே தியாகராஜனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதாவைச் சந்தித்த கராத்தே தியாகராஜன், என்னிடம் துணை மேயர்பதவியைக் கொடுங்கள். ஸ்டாலினுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன் என்றுகூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது துணை மேயர் தேர்தலில் கராத்தே தியாகராஜன்போட்டியிடுவார் என்று அ-திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னை மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் உள்ள அமைச்சர்ஜெயக்குமார், வளர்மதி ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், கராத்தேதியாகராஜனின் வெற்றிக்குப் பாடுபடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்களின் கூட்டத்தை இரு அமைச்சர்களும் கூட்டிகராத்தே தியாகராஜனுக்கு வெற்றி வாய்ப்பத்ை தேடித் தரும்படி கேட்டுக் கொண்டனர்.

155-வது வார்டில் முதலில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாகஅறிவிக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் பின்னர் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X