காஷ்மீரில் மசூதிக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதி
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் புகுந்து கொண்ட தீவிரவாதி ஒருவனைச் சரணடையச்செய்ய பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேகடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இருந்துதப்பிக்க ஓடினார்கள். அவர்களில் 2 பேர் ஒரு வீட்டுக்குள் ஒளிந்துகொண்டனர். மற்நொருவர் அருகில் இருந்தமசூதிக்குள் புகுந்து கொண்டார்.
வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அவர்களும்பதிலுக்குத் திருப்பிச் சுட்டனர். இந்தச் சண்டையில் அவக்ள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மசூதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள தீவிரவாதியைச் சரணடையச் செய்ய பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சிமேற்கொண்டு வருகின்றனர். அவன் வெளியில் தப்பிவிடாமல் இருக்க மசூதியின் அனைத்து வழிகளையும்பாதுகாப்புப் படையினர் அடைத்துவிட்டனர். மேலும் மசூதியைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் வேறு யாரும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று காஷ்மீர் மாறில போலீசாரும்,பாதுகாப்புப் படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காஷ்மீர் மாநில போலீஸ் ஐ.ஜி. அசோக் காந்த் கூறுகையில்,
மசூதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள தீவிரவாதி, எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்று தெளிவாகத்தெரியவில்லை.
அவன் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவனாகஇருக்கலாம். மேலும் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் பதுங்கியுள்னரா என்று கண்டுபிடிக்க தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அசோக் காந்த்.