பாண்டி. அமைச்சரவையில் 6 பேருக்கு வாய்ப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையில் 6 பேர் வரை இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே, பாண்டிச்சேரி அமைச்சரவையில் 6 பேர் வரை அதிகபட்சம் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. காங்கிரஸ்சார்பில் 3 அமைச்சர்களும், கூட்டணிக் கட்சிகள் சார்பில் 3 அமைச்சர்களும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளையும் அமைச்சரவையில் சேருமாறு காங்கிரஸ் கோரி வந்தது. தற்போதுஅதிமுகவுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு அமைச்சர் பதவி தரப்படும் என்று தெரிகிறது.
அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸுக்கும் ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். புதிய கூட்டணிக் கட்சியான பாண்டிச்சேரிமக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.
ஒருவேளை பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கூடுதல் அமைச்சர் பதவி கேட்டால், அதிமுகவுக்கான அமைச்சர் பதவி ரத்துசெய்யப்படும். அவர்களுக்கு சபாநாயகர் பதவியோடு வேறு ஏதேனும் ஒரு பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல, முன்னாள் முதல்வர் சண்முகத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு அமைச்சர் பதவி தரப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பதவிக்கான எம்.எல்.ஏக்களைத் தேர்வு செய்யும் பணியில் முதல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் தலைவர் நாராயணசாமிஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.